• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home பொருளாதாரம்

புனித வேடம் பூணும் புரட்டர்

வெங்கட் இரமணன் by வெங்கட் இரமணன்
May 16, 2020
in பொருளாதாரம்
2
புனித வேடம் பூணும் புரட்டர்

ஆடும் வரை ஆட்டம்

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

இந்திய அரசு அறிவித்துள்ள கோவிட் நிவாரண தொகுப்பிற்கு வாழ்த்துக்கள். அவர்களால் எவ்வளவு பணம் தேவையோ அவ்வளவையும் புதிதாக அச்சடித்துக் கொள்ள இயலும். ஆனால் எனது சிறிய பங்காக இந்திய அரசு வங்கிகளிடம் நான் பெற்றுள்ள கடன்களை 100 சதவிகிதம் முழுவதும் திரும்பி செலுத்துவதையும் இந்திய அரசு  ஏற்க வேண்டும்” – திருவாய் மலர்ந்து அருளிச் செய்திருப்பது  பொருளாதார மற்றும் இதர குற்றங்களை வரிசைப்படி செய்து விட்டு இந்தியாவை விட்டு ஓடி லண்டனில் பதுங்கியிருக்கும் விஜய் மல்லையா.
இதனை படிக்கும் அனைவர் மனதிலும் இயல்பாக என்ன தோன்றும்? சரி,  இந்த ஆசாமி தான் கடனை திரும்பி செலுத்துவதாக சொல்கிறாரே, வாங்கிக் கொண்டு விட்டு விட வேண்டியது தானே!  மேலோட்டமாக பார்த்தால் அதுவும் சரிதான். ஆனால் உண்மை அதுவா? ஏனிந்த திடீர் மனமாற்றம்? இப்படி ஒரு எண்ணம் இருப்பவர் ஏன் நாட்டை விட்டு ஓட வேண்டும்? விடை தேடுவோம்.
1. பல வங்கிகளிலும் தான் வாங்கிய  9000 கோடிகளுக்கும் மேலாக கடன் தொகை நிலுவையில் இருக்கையில் விஜய் மல்லையா தேசத்தை விட்டு ஓடினார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இதில் வழக்குகளை தொடுத்துள்ளன. இந்த வழக்குகளில் மல்லையா மீதான பிடி இறுகியுள்ளது. மல்லையாவின் 8000 கோடிகள் மதிப்பிலான  அசையா சொத்துக்கள் மற்றும் பங்குகள், முதலீடுகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவற்றின் சந்தை மதிப்பு இன்னும் பல மடங்கு இருக்கும். 
2. லண்டனில் பதுங்கியுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி இந்திய அரசு நிறுவனங்கள் போட்டுள்ள வழக்குகளில் மல்லையாவிற்கு எதிரான தீர்ப்புகளே வந்துள்ளன. முதலில் மாவட்ட அளவிலான நீதிமன்றம் மல்லையா இந்தியாவில் பண மோசடி செய்யும் நோக்கத்துடனே சொத்து மதிப்புகளை போலியாக உயர்த்தி காட்டி கடன் வாங்கியதற்கு வலுவான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாக கூறி இவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் செய்த முறையீடுமே தோல்வியடைந்தது. சீன வுஹான் வைரஸ் என்று அழைக்கப்படும் கோவிட் 19 மட்டும் இல்லையென்றால் மல்லையா இந்நேரம் இந்திய சிறைச்சாலைகளில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்.  
3. மல்லையா திருப்பி செலுத்துவதாக கூறுவதுமே கூட “இந்திய பொதுத்துறை வங்கிகளிடம்” வாங்கியுள்ள கடன்களை மட்டுமே. தனியார் வங்கிகளிடம் வாங்கிய கடன்களைப் பற்றி மூச்சு விடவில்லை. ஒருவேளை இந்திய அரசு மல்லையாவின் இந்த அறிவிப்பை ஏற்குமானால் அது மிகவும் எதிர்மறையான சங்கேதங்களை அனைத்து முதலீட்டாளர்களிடமும் தோற்றுவிக்கும். சங்கடம் வரும் நேரங்களில் இந்திய அரசு தனது பொதுத்துறை வங்கிகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும், நம்மை தத்தளிக்க விட்டு விடும் என்ற எண்ணம் உறுதி பெற்று விடும். இது மிகவும் ஆபத்தானது.
கோவிட் 19 காரணமாக நிலவும் அசாதாரண சூழலை தனக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார் இந்த கைதேர்ந்த செப்படி வித்தைக்காரர். ஆனாலும் பாவம் இவர், ஒன்றை மறந்து விட்டார். தனது நாட்காட்டியை இன்னும் இவர் 2014 ம் வருடம் மே மாதம் 15ம் தேதிக்கு பிறகு மாற்றவே இல்லை போலும்!

Tags: Economymallaiya
Previous Post

கொரோனா கற்றுத் தந்த பாடங்கள்

Next Post

வெல்க இந்தியா!

வெங்கட் இரமணன்

வெங்கட் இரமணன்

Next Post
வெல்க இந்தியா!

வெல்க இந்தியா!

Comments 2

  1. Kalyanaraman Raman says:
    3 years ago

    அதென்ன புரட்டர், புரோட்டா மாஸ்டர் மாதிரி? புரட்டன்னு சொல்லுங்கள்.

    Reply
  2. அஸ்வின் says:
    3 years ago

    2019 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும். அதுவரை கோர்ட்டில் வழக்கை இழுக்கடித்து இறுதியில்தப்பித்துக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தான் இந்த சாகச புரட்டன்… இப்ப அம்புட்டுக்கிட்டான் இந்த தும்பட்டிக்கா பயல்.
    நீரவ் மோடியும் விரைவில் நாடு கடத்தப்படுவான்…

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.8k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
மோகன்லால் ஜூவல்லரி நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு!

வருமானவரி வசூலில் பாய்ச்சலெடுக்கும் ஐதராபாத், பெங்களூரு

April 12, 2023

Recent News

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
மோகன்லால் ஜூவல்லரி நிறுவனத்தில் நடந்த ஐ.டி.ரெய்டில் கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணங்கள் கண்டுபிடிப்பு!

வருமானவரி வசூலில் பாய்ச்சலெடுக்கும் ஐதராபாத், பெங்களூரு

April 12, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108