• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home Lifestyle

கடையனுக்கும் கடைத்தேற்றம்

பைரவி by பைரவி
October 19, 2022
in Lifestyle, சுதேசி, தேசியம், பொருளாதாரம், வாழ்வியல்
0
கடையனுக்கும் கடைத்தேற்றம்
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

சர்வோதயம், சோசலிசம் மற்றும் கம்யூனிசம் ஆகிய சித்தாந்தங்கள் எல்லாம் அடிப்படையாக கூறுவது கடையனுக்கும் கடைத்தேற்றம். இந்த லட்சியத்தை அடைவதற்கு அவரவர்கள் ஒரு வழியை வைத்திருக்கின்றனர்.கடையனுக்குத் தான் இதுவரை கடைத்தேற்றம் கிடைக்கவில்லை. 

ஆனால் இது எதையும் சாராமல் பொது மக்களாகிய நாம் இந்த லட்சியத்தை  சமூகம் எளிதாக அடைய  உதவ முடியும்.

எந்த ஒரு சமூகமும் தனக்குத்தானே உதவி கொண்டால் அது மற்ற எல்லா சமூகத்தையும் விட மிகவும் சிறப்பாக மிகவும் எளிதாக முன்னேறி விடும் என்பது உலக நியதி. அத்தகைய பல சமூகங்களை நாம் தமிழகத்திலும் நமது பாரத நாட்டிலும் ஆங்காங்கே கண்டு வருகிறோம்.

தமக்குத் தாமே உதவிக் கொள்ளும் சமூகங்கள்

எனினும், ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் அடங்கிய சமூகம் மட்டும் முன்னேறுவது போதாது.அனைத்து ஜாதி மக்களும் முன்னேற வேண்டும்.அப்படியென்றால் அனைத்து ஜாதி மக்களின் பல சிறிய முன்னெடுப்புகளும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லன. ஜாதி மத வேறுபாடின்றி பொதுமக்கள் தத்தம் பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு சிறிய அளவில் பொருளாதார உதவி அளிக்கும் போது அது சிறுதுளி- பெருவெள்ளம் ஆகி அரசாங்கத்திற்கு நிதிச்சுமையை அளிக்காமல் சமூகத்திற்கும் பெரிய சுமையை அளிக்காமல் ஒட்டு மொத்த சமூகமும் எளிதாக முன்னேற வழி வகுக்கிறது. அத்தகைய வழிமுறையை நாம் இக்கட்டுரையில் காண்போம்:

தீபாவளி என்றாலே நாம் எல்லோரும் ஆயிரக்கணக்கான ரூபாயை ஓரிரு வாரங்களில் பெரிய முதலாளிகள் நடத்தும் கடைகளில் செலவிடுகிறோம். ஆனால் பிளாட்பாரங்களில் வியாபாரம் செய்யும் ஏழை மக்களிடம் நமது பார்வை செல்வதில்லை. ஏனெனில் அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்கள் தரமற்றதாக இருக்கும் அல்லது விலை சற்று கூடுதலாக இருக்கும்;அல்லது நமக்கு தேவையானதாகக் கூட இல்லாமல் இருக்கலாம். 

ஒவ்வொரு விஷயத்திலும் நாம், நமது காசு செலவாவதை நுட்பமாக கணக்கிட்டு, மிகவும் தரமான-அதே சமயத்தில் மலிவான விலையில் விற்கும் வியாபாரியிடம் நமக்கு தேவையான் பொருளை வியாபாரம் செய்வது ஏழை எளிய வியாபாரிகளை  நஷ்டம் அடைய செய்து அவர்கள் அந்த வியாபாரத்தை விட்டுவிட்டு மாத வருமானம் அளிக்கக்கூடிய முறைசார் தொழிலை தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். 

நமது  நாட்டின் பலமே ஏழை எளிய மக்கள் சுயதொழில் எனும் முறை சாராத தொழில்களில்  ஈடுபடுவதே ஆகும். ஏறக்குறைய 90 சதவீதம் வேலைவாய்ப்பு முறைசாராத தொழில் பிரிவுகளில் தான் உள்ளன.

  ஏழைகள் எல்லோரும்  சுய தொழிலை கைவிட்டு முறைசார் மாத வருமானம் வேலைவாய்ப்புகளை நாடும்போது, அரசாங்கம் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உற்பத்தி செய்கிறேன் என்ற  பெயரில் ஊழல் மிகுந்த நடைமுறைகள் மூலம் அதிக நிதிகளை விரையம் செய்து சமூகத்திற்கு அதிக அளவில் பொருளாதாரச் சுமையினை ஏற்படுத்தக் கூடிய நிலைமையை ஏற்படும். மேலும் சமூகத்திற்கு அவசியமான துறைகளில் அரசாங்கத்தின் முதலீடு குறைந்து பொது மக்களின் வாழ்க்கை  கஷ்டம் மிகுந்ததாக மாறிவிடும்.

எனவே,தீபாவளியை ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் கொண்டாடும் நாம் இலாபம்,தரம் அல்லது நமது தேவை ஆகிய இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் பிளாட்பார கடைகளில் குறைந்த பட்சம் பத்து ரூபாய்க்காவது வியாபாரம் செய்யலாம்; அதை நூறு பேரிடமாவது வியாபாரம் செய்யலாம். வியாபாரம் சில சமயங்களில் நமக்கு தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம். இருந்தாலும் அதை விற்கும் ஒரு ஏழையின் பொருளாதார பின்னணியை கணக்கில் கொண்டு அதை வாங்குங்கள். நாம் ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கணக்கிலோ  அல்லது ஆயிரக்கணக்கிலோ வியாபாரம் செய்யப்போவதில்லை; வெறும் பத்து அல்லது இருபது ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் செய்யப்போகிறோம். மிஞ்சி மிஞ்சி போனால், 100 ரூபாய் அளவிற்கு வியாபாரம் செய்ய வேண்டி வரலாம் எனவே இதில் உங்கள் பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளாதீர்கள். 

தேவையற்ற பொருளையும் வாங்குவோம்

சராசரியாக ஒவ்வொரு வியாபரியிடமும் பத்து ரூபாய் என்ற கணக்கில் சுமார் ஆயிரம் பேர் ஒவ்வொரு பிளாட்பார வியாபாரியிடம் வியாபாரம் செய்தால், அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வியாபாரம் ஆகி அதில் ஆயிரம் ரூபாயாவது இலாபம்  ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.அது அவர்களுக்கு பெரிய தொகை; அவர்களும் தீபாவளியை கொண்டாட உதவும்.எதிர்காலத்தில் அவர்கள் தொடர்ந்து தங்கள் தொழிலை நடத்திட அவர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படும்.

எனவே, ஒவ்வொருவரும் குறைந்தது இந்த தீபாவளிக்கு ஆயிரம் ரூபாயாவது பிளாட்பார வியாபாரம் செய்வோம்.

இதை ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஒரு இயக்கமாகவே நடத்துவோம்.

 இதுதான் உண்மையான சமூக நீதி!

Share this:

  • WhatsApp
  • Tweet
  • Share on Tumblr
  • Telegram
Previous Post

இட ஒதுக்கீடும் Freebies ஆக கருதப் படவேண்டும்.

Next Post

சிட்ரங் புயல்

பைரவி

பைரவி

Next Post
சிட்ரங் புயல்

சிட்ரங் புயல்

Leave a Reply Cancel reply

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.8k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
பாப்பம்மாளிடம் மோடி  ஆசிர்வாதம்

பாப்பம்மாளிடம் மோடி ஆசிர்வாதம்

March 19, 2023
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

March 19, 2023
ஜவுளித் துறையில்  20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

ஜவுளித் துறையில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

March 18, 2023
புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

March 18, 2023

Recent News

பாப்பம்மாளிடம் மோடி  ஆசிர்வாதம்

பாப்பம்மாளிடம் மோடி ஆசிர்வாதம்

March 19, 2023
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

March 19, 2023
ஜவுளித் துறையில்  20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

ஜவுளித் துறையில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

March 18, 2023
புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

March 18, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108