2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாகவும், 2022-23ம் நிதியாண்டில் 17.2 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
2021-22ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ஜூலை மாதத்தில் பல வளர்ச்சி காரணிகள் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நாணய கொள்கை கூட்டத்தின் உறுப்பினர்கள் 5:1 வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளனர். நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், எம்எஸ்எப் விகிதம் 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீத வட்டி விகிதம் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடரும்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை.